லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ‘இந்து சமாஜ் கட்சி’ என்ற இந்துத்துவா அமைப்பின் தலைவரும், அகில பாரத இந்து மகா சபாவின் முன்னாள் பிரமுகருமான கமலேஷ் திவாரி கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.இந்தக் கொலை தொடர்பாக பைசன் யூனுஸ் பாய், மௌலனா மொஹ்சின் ஷேக், ரஷீத் அகமதுஉள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், தனது மகனின் சாவுக்கு உத்தரப்பிரதேச பாஜக அரசுதான் காரணம் என்று கமலேஷ் திவாரியின் தாயார் குசும் திவாரி தொடர்ந்து குற் றம் சாட்டி வருகிறார். அகிலேஷ் ஆட்சியில் கமலேஷ் திவாரிக்கு 17 போலீசார் பாதுகாப்பு அளித்த நிலையில், பாஜக முதல்வர் ஆதித்யநாத் அதனை 4 போலீசார் என்று குறைத்து விட்டார்; மகனின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பலமுறை மனு கொடுத்தும் மாநில பாஜகஅரசு அதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறும் குசும் திவாரி, கோவில் நிலம் தொடர்பாக உள்ளூர் பாஜக பிரமுகருக்கும் கமலேஷூக்கும் இடையேமுன்பகை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.இதனிடையே கமலேஷ் திவாரியின் படுகொலை வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை என்று புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ள குசும் திவாரி, எனது மகனின் மரணத்திற்கு நீதிகிடைக்காவிட்டால், நீதியை பெறுவதற்காக வாளைத் தூக்கவும் தயங்கமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் ஆதித்யநாத் உடனான சந்திப்புக்கு, அதிகாரிகள் தங்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகவும் புகார் கூறியுள்ளார்.